பொறுமை

 

பொறுமை ஆன்மீக குணங்களில் மிகச் சிறந்தது. உன்னால் பொறுமையாக இருக்க முடிந்தால் வேறு எதுவும் தேவையில்லை. பொறுமை மட்டுமே போதுமானது, அது மட்டுமே போதும். வெறெதுவும் தேவையில்லை. பொறுமை என்றால் இணைப்புணர்வு. எந்த வித அவசரமும் இல்லாமல், எந்த வித அறிபறியும் இன்றி இணைப்புணர்வோடு இருத்தல்.

 

நேசம் மிகவும் மெதுவாக வளரும், அதற்கு பொறுமை தேவை.

 

பொறுமை மிகவும் கவனமானது, பொறுமை சக்தியானது, பொறுமை விரிவடையக்கூடியது.

 

காத்திருத்தல் என்பது மிகவும் சிறப்பான குணம், அதற்கு ஆழ்ந்த பொறுமை தேவை. அது ஆழமான இணைப்புணர்வு.

 

உன் உள்ளிருப்பு குணப்பட தேவை ஒரு ஆழ்ந்த பொறுமை.

 

பயணகாலம் அளவிட முடியாதது. எனவே அளவற்ற பொறுமை தேவை.

 

பொறுமையான மனிதன் தியானிப்பவனாக மாறுவான், ஏனெனில் அவன் உள் வாங்குபவனாக மாறுகிறான்.

  

வெடித்து வெளிப்படல்

 

மனிதனுக்கு சக்தியை, அளவற்ற ஆற்றலை, மாபெரும் சக்தியை உருவாக்கும் திறன் உள்ளது. மனிதன் பார்க்கும் போது தெரியும் அளவு மிகச் சிறியவன் அல்ல. கண்ணுக்கே தெரியாத அளவு மிகச் சிறியதாக இருக்கும் அணுவால் அளவற்ற சக்தியை வெளிப்படுத்த முடியும். இந்த சிறிய அணு வெடிக்கும்போது அதீத சக்தியை வெளிப்படுத்துகிறது எனும்போது மனிதனின் தன்னுணர்வைப்பற்றி என்ன சொல்வது மனிதனின் தன்னுணர்வும் வெடித்து அதீத ஆற்றலை வெளிப்படுத்தும்.

 

நானும் சாதாரண மனிதனாக இருந்தவன்தான். திடீரென இந்த வெடித்து வெளிப்படல் நிகழ்ந்தது……….

 

உன்னுடைய வெடித்து வெளிப்படலின் மையத்திற்கு நீ வரும்போது நீ உன்னுடைய ஞானமடைதலின் அருகே நெருங்குகிறாய்.

 

என்றாவது ஒருநாள் உன்னுள் அணு வெடித்து வெளிப்படல் நிகழ்ந்தே தீரும்.

 

ஒளி வெளிப்பாட்டை, ஒரு பிரகாசத்தை நீ அறியும்போது நீயும் ஒரு புத்தன்தான்.

 

எண்ணற்ற காலம் படைப்பில் முழ்கி இருப்பது – இதுதான் வெடித்து வெளிப்படல்.

 

வெளிபடுத்துதல்

 

அடக்கி வைத்தல் சுதந்திரத்தை நோக்கி அழைத்து செல்லாது. அடக்கி வைத்தல் வெளிபடுத்துதலை விட மோசமானது. ஏனெனில் வெளிப்படுத்துதல் மூலமாக என்றாவது ஒருநாள் அந்த நபர் விடுதலை பெறக்கூடும், ஆனால் அடக்கி வைத்தல் மூலமாக அவர் எப்போதும் அதன் பிடியில் இருப்பார். வாழ்வு மட்டுமே உனக்கு சுதந்திரத்தை தரும், வாழும் வாழ்க்கை உனக்கு விடுதலை தரும், வாழாத வாழ்க்கை ஈர்ப்பைத் தருவதாகத்தான் இருக்கும்.

 

ஒரு பாடல் பாடு, அது ஒரு லா..லா..லா.. என்பதாகக் கூட இருக்கலாம். அது உயிர்ப்போடு இருக்கும். அது சந்தோஷத்தின் வெளிப்பாடு.

 

அது தன்னுணர்வற்ற நிலை. அதனால்தான் அதை காதலில் விழுவது என்று நாம் சொல்கிறோம்.

 

உனது மௌனத்தில், ஆழ்ந்த மௌனத்தில் இருக்கும் கணத்தில் உனது வெளிபடுத்துலில் இரு.

 

ஒவ்வொரு கலைஞனும் வெளிபடுத்தலில் வேறுபட்ட வகைகளை முயற்சி செய்கிறான்.

 

மரங்களும் மனிதனும் வேறுபட்ட வெளிபடுதல்தான் ஆயினும் வாழ்வு என்பது ஒன்றுதான்.

 

அதீத சோகத்திலும், மிகப்பெரிய சந்தோஷத்திலும் கண்ணீர்தான் வெளிபடும்.