கஷ்டப்பட்டு
படைத்தாலும்,

கணக்கிட்டுப்
படைத்தாலும்,

உயிரிருப்பதில்லை…..ஆம்,

அழகிருந்தாலும்
உயிரிருப்பதில்லை,

சுவையிருந்தாலும்
சக்தி தருவதில்லை,

சிறப்பிருந்தாலும்
வாழ்விருப்பதில்லை.

அன்பில்
படைப்பவன்,

எதை
படைத்தாலும்,

அழகைப்
படைக்கிறான்

அமிர்த்தைப்
படைக்கிறான்,

ஆன்மாவைப்
படைக்கிறான்!

ஆகவே………

எது
செய்தாலும் அன்பாயிருந்து செய்,

அதுவே
தெய்வப் பண்பு !

 

 2. உச்சம்

அன்பு
உன் ஆற்றலின் உச்சம்,

அதற்கு
மேல் வாழ்வதற்கு இல்லை மிச்சம்!