துயரம் தோல்வி,
கவலை வருத்தம்,
சோகம் துக்கம்,
சலிப்பு வெறுமை,
வேகம் எரிச்சல்,
பயம் பரபரப்பு,
வன்முறை படபடப்பு,
இறுக்கம் வேதனை,
ஏமாற்றம் விரோதம்,
பொறாமை பகைமை,
பேராசை போட்டி,
நோய் சாவு,

இவை எல்லாமே நிழல்கள்!
அன்பின் ஒளியில்லாத அந்தரங்கத்தில் –
உயிர் கோமாவில் இருப்பதால்,
அடையாளம் தெரிந்துகொள்ளாமல்,
தவறான கற்பனையில் பிறக்கும்
கனவு பிம்பங்கள்
ஆகவே…………….
இதயத்தை அன்பால் நிரப்பு.
இதுவே நல்லுயிர் காக்கும் குளூக்கோஸ்!