நண்பா!

அன்பு ஒரு பாலம்,

இதயத்திலிருந்து இதயத்துக்கு

இது……..

இரு உயிர்களை இணைப்பது,

இரு உணர்வுகளை ஒருமிப்பது,

இரு உடல்கள் சங்கமிப்பது,

இப்படி எப்படியும் இருக்கலாம்!

ஆனால்……

இந்த அன்பு பாலம்

அழியாமல் இருக்க

தேவை இரண்டு……

“ உறுதியான தனித்தன்மை,

போதிய இடைவெளி. ”

ஆம்….

தனிதன்மையே தாங்கிப்பிடிப்பது,

தனித்தன்மையே கவருவது,

இடைவெளியே ஏங்கச் செய்வது,

இடைவெளியே பாலம் அமைப்பது.

நிறைவேறாத காதல்…..

என்றுமே இன்பம் தருவது எதனால் தெரியுமா?

தனித்தன்மை இழக்காமல்

ஒருவரையொருவர்
ருசித்தது,

இடைவெளி உடையாமல்

நெருக்கத்தை
ரசித்தது,

அன்புப்பாலம் கட்டி

அதன்
மேல் சந்தித்தது.

இடைவெளி உடைந்து

இருவரும்
இணைந்திருந்தால்

எதிர்பார்ப்பே மிஞ்சியிருக்கும்!

ஆகவே…..

தனித்தன்மையோடு இருப்போம்,

இடைவெளியோடு உறவு கொள்வோம்.

இது…..

சுதந்திரம் காக்கும் அன்பு!

உதவிக் கொள்ளும் அன்பு!

அடிமைத்தனமும் கடமையுணர்வும் கடந்த அன்பு!