சொல்லு நண்பனே சொல்லு !

ஏன் நமது இதயம் இப்படி சிறுத்துக்
கிடக்கிறது ?

ஏன் அது இத்தனை சிக்கல்களுக்கு
இடையில் சிதைபடுகிறது ?

ஏன் மூளையின் நரம்புமண்டலம்
இதயத்தில் படரவில்லை ?

ஏன் இந்த நிற்காத நினைவரட்டையில்
உன்னை சிக்கவைக்க
மனதிற்கு இத்தனை வலிமை ?

ஏன் அமரத்துவ வாழ்விற்குப் பறக்க
சிறகு செய்யும் இதயத்திற்கு
இந்த ஓர வஞ்சனை ?

இணைபிரியா வழிநடக்கும் நண்பனே
சொல்லு !

ஏன் நாம் இப்படி
மடையர்களாயிருக்கிறோம் ?

ஏன் நாம் இப்படி எதற்கும் பயந்த
எலிகளாய் பொந்தில்  வாழ்கிறோம் ?

ஏன் நாம் சிறகடித்து
விடுபடக்கூடாது ?

ஏன் இதயத்திற்கு வலிமை
கூட்டக்கூடாது  ?

ஏன் நாம் அன்பே ஒழுக்கமாய்க்
கொண்ட புதிய மனிதனாக்க்கூடாது ?

இது எளிது, மிக எளிது !

ஆழமாக மூச்சை உள்ளிழுங்கள்,

நேசக்கரம் நீட்டுங்கள் –

உங்களுக்கும் உங்கள் எதிரில்
இருப்பதற்க்கும்!

“ அல்லி நிரம்பிய குளம் ,

மென்மையும் கம்பீரமுமாய் ! “

அவைகளுக்குத் தெரிகிறது அன்பின்
சுவை !

அதனால்தான் அவை வளர்ந்து
நறுமணமாய் உருமாறி

பறக்க
ஆரம்பித்து விடுகின்றன.!

ஓ! எனது மன்னர்களே ! ராணிகளே !

நீங்கள் அழியாத உலகத்தின் தன்னிகரில்லா
உயிர்கள் !

சிறகுகளுடன் மண்ணில் தவழாதீர்கள் ,

இந்த முழு அண்டமும் உங்களுக்குச்
சொந்தம் !

                                             ….தொடர்ச்சி அடுத்த  இதழில்