டிரைவிங் பழக ஆரம்பித்தால், ஆரம்பத்தில் நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக்கரம், ஆக்ஸிலேட்டர், பிரேக், கிளட்ச், பாதையில் நடக்கும் மக்கள் என பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மெதுமெதுவாக நீ டிரைவிங் பழகி விட்டால் எதை பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எல்லாமும் தன்னிச்சையாகி விடும்.

இது வாழ்க்கைக்கு தேவையான ஒன்று. இல்லாவிடில் நீ பல விஷயங்களை செய்யவே முடியாது. இப்படி பழக்கப்பட்ட விஷயங்கள் ரோபோட்டாக மாறி விடும். பின் அதை அந்த ரோபோட் செய்யும் நீ வேறு எதையாவது கற்கலாம். இது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானது., ஆனால் மெதுமெதுவாக அந்த ரோபோட் பெரிதாகி விடும். உனது சிறிய அளவிலான தன்னுணர்வு சிறிய அளவிலேயே நின்று விடும்.

ஒருவர் தன்மீது கவனம் செலுத்தி செய்ய வேண்டிய செயல் எதுவென்றால் தன்னிச்சையான ரோபோட் பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். நீ உனது பழக்கத்திலிருந்து விடுபட்டால் மிக விழிப்புணர்வு பெறுவாய்.

கவனத்தோடு அரைமணி நேரம் நடந்தால் எவ்வளவு அமைதியாக எவ்வளவு சாந்தமாக எவ்வளவு நிம்மதியாக நீ உணர்கிறாய் என்று பார். ஒரு மணி நேரம் அமர்ந்து சுவாசத்தை கவனித்தால் உன் வாழ்க்கையில் நீ இதுவரை உணர்ந்திராத அளவு மிகுந்த மௌனத்தையும், கவனத்தையும் அது உன்னுள் கொண்டு வரும். அதுதான் வித்தியாசத்தை கொடுக்கிறது.

அந்த வித்தியாசம்தான் உன் வாழ்க்கை முழுமையையும் மாற்றுகிறது. பின் நீ சாப்பிடுவது, நடப்பது, சுவாசிப்பது என எல்லாவற்றையும் மாற்ற முடியும். அன்பு செய்வதைக்கூட மிகவும் தன்னுணர்வுடன் மிகவும் கவனமாக செய்ய முடியும்.

பின் எல்லா இடத்திலிருந்தும் தன்னுணர்வு மழையாய் பொழியும், மெதுமெதுவாக சமநிலை வரும். நீ தன்னுணர்வு அற்ற நிலையிலிருந்து தன்னுணர்வோடு இருக்கும் நிலை பெறுவாய்.

THE PERFECT MASTER         VOL  1     CHE# 7