1.

நீங்கள் உண்மையிலேயே உங்களுக்குச் சத்திய தரிசனம் நிகழ விரும்பினால், தனி மனிதனாய் இருங்கள். தனிமனிதனாய் இருப்பதற்குத் தேவைப்படும் எல்லா ஆபத்துகளையும் எதிர்கொள்ளுங்கள். அதற்கான அறைகூவல்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்மூலம் அவை உங்களைக் கூர்மையடையச் செய்யும். உங்களுக்கு நுண்ணறிவையும்,ஜொலிப்பையும் கொடுக்கும்.

 

2.

சமரசம் செய்துகொண்ட வாழ்வை வாழ்வது இறப்பைவிட மோசமானது. சத்தியமான வாழ்வை வாழ்வது, அது ஒரு கண நேரமேயானாலும்கூட, பொய்யில் நிரந்தரமாக வாழ்வதை விட மிகமிக மதிப்பு மிக்கது. பொய்யில் வாழ்வதைவிடச் சத்தியத்திற்காக இறப்பது மிகவும் மதிப்பு மிக்கது.

 

3.

வாழ்வு ஒன்றையொன்று சார்ந்தது. ஒருவரும் தனித்தவரல்ல. ஒரு கண நேரம் கூட உங்களால் தனியாக இருக்கமுடியாது. உங்களுக்கு இந்த முழு பிரபஞ்ச இருப்பின் உதவியும் வேண்டும். ஒவ்வொரு கணமும் அதை நீங்கள் சுவாசிக்கிறீர்கள். இது ஓர் உறவல்ல. இது சுத்தமான ஒன்றோடொன்று சார்ந்த நிலை.