1.

ஒரு பெண் முடிந்த அளவு அதிக பெண்மை கொண்டவளாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் அவள் மலர முடியும். ஓர் ஆண் முடிந்த அளவு அதிக ஆண்மை கொண்டவனாக இருக்க வேண்டும், அப்போதுதான் அவன் மலர முடியும். இவர்கள் இப்படி எதிர்நிலை துருவங்களாக மாறும் பொழுது, ஒரு பெரும் கவர்ச்சி, ஒரு பெரும் ஈர்ப்பு அவர்களுக்குள் எழும்புகிறது.

2.

தியானம் என்பது இடத்திலோ காலத்திலோ செய்யும் பயணமன்று, மாறாகச் சட்டென விழித்துக்கொள்வது. இங்கு இப்போது நீங்கள் மௌனமாக இருக்க முடிந்தால், இதுவே மறுகரை. உங்களால் மனம் நின்று விடுவதை, செயலற்று விடுவதை அனுமதிக்க முடிந்தால், இதுவே மறுகரை.

3

நீங்கள் மனத்திலிருந்து இதயத்தை நோக்கிச் சாயுங்கள். அதுவே முதல் மாற்றம். குறைவாக எண்ணுங்கள், அதிகம் உணருங்கள். அறிவுபூர்வமாக இருப்பதைக் குறையுங்கள், உள்ளுணர்வை அதிகப்படுத்துங்கள். எண்ணிக் கொள்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை, அது நீங்கள் மாபெரும் காரியங்களைச் செய்வதாக உணரச் செய்யும். ஆனால் உண்மையில் நீங்கள் ஆகாயக் கோட்டைகள்தான் கட்டுவீர்கள். எண்ணங்கள் வெறும் ஆகாயக் கோட்டைகள் அல்லாமல் வேறொன்றும் இல்லை.