தியான யுக்தி – 1

 

தீர்மானம்

எப்போது – இரவில்

காலம்  – 10 நிமிடங்கள்.

முதல் படி  :
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது திரும்ப திரும்ப சொல்லுதல்………

அவசரப்படாமல், மெதுவாக, சுவாசத்தை உள்ளிழுத்து உனது நுரையீரல் முழுவதும் காற்று நிரம்பும்படி
செய். அப்படி செய்யும்போதே, உனக்குள் நீ உன் வாழ்வில் செய்ய விரும்புவது எதுவோ அதை
மெதுவாக திரும்ப திரும்ப சொல். உதாரணமாக  ‘ நான் தியானஉணர்வு பெறுவேன்.’

இரண்டாவது படி : உன் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு திரும்ப திரும்ப சொல்லுதல்……..

உனது நுரையீரல் முழுவதும் நிறைந்தபின் உனது மூச்சை இழுத்து பிடித்துக் வைத்துக்கொண்டு,  ‘நான் தியானஉணர்வு பெறுவேன்’ என்பதை திரும்ப திரும்ப சொல். நீ பதட்டமடைவாய், மூச்சை வெளிவிட துடிப்பாய், இருப்பினும் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நான் தியானஉணர்வு பெறுவேன் என்பதை திரும்ப திரும்ப சொல்.

மூன்றாவது படி  மூச்சை வெளிவிடும்போது திரும்ப திரும்ப சொல்லுதல்….

இப்போது மெதுவாக மூச்சை வெளிவிட்டபடி நான் தியானஉணர்வு பெறுவேன் என்பதை திரும்ப திரும்ப சொல். சுவாசம் முழுமையாக வெளியேறும்வரை மூச்சை வெளிவிட்டபடி நான் தியானஉணர்வு பெறுவேன் என்பதை திரும்ப
திரும்ப சொல்.

நான்காவது படி  மூச்சை முழுமையாக வெளியேற்றியபின் திரும்ப திரும்ப சொல்.

இப்போது முழுமையாக மூச்சை வெளியேற்றியபின் திரும்ப சுவாசிக்காதே. மூச்சை இழுத்து பிடித்து
வைத்துக் கொண்டு எவ்வளவு தடவை முடியுமோ அவ்வளவு தடவை திரும்ப திரும்ப
நான்தியானஉணர்வு பெறுவேன் என்பதை சொல்.

ஐந்தாவது படி  சுவாசி….

இப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுக்க ஆரம்பி. ஒரு முறை உள்ளிழுத்து ஒருமுறை வெளியே விடுவது
இரண்டும் சேர்ந்து ஒரு தடவை என்பதாகும்.

ஆறாவது படி  ஓய்வெடு.

இதை ஐந்து முறை செய்தபின் மெதுவாக சுவாசித்தபடி நிமிர்ந்து அமைதியாக
உட்கார்ந்து ஓய்வெடு. உனது உடல் தளர்வாக, கண்கள் மூடியபடி ஐந்து நிமிடங்கள் உட்கார்.

நான் அமைதியை அடைவேன், நான் தியானஉணர்வு பெறுவேன், நான் தியானஉணர்வு பெறுவதில் உறுதியாக இருக்கிறேன் என்று உனது முழு உயிர்த்தலும் இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்ளட்டும். அதன்மூலம் அது
தியானத்தினுள் நுழையட்டும். உனது முழு இருப்பையும் அந்த உறுதி மொழி சூழ்ந்து
கொள்ளட்டும். இது உன் தன்னுணர்வின் ஆழ் மையம்வரை சென்று சேரட்டும்.

இந்த ஓய்வாக இருக்கும் நேரத்தில் நீ எடுத்துக்கொண்ட தீர்மானம் உன் உள்ளே உள் மையத்திற்கு சென்று சேரட்டும். அந்த தீர்மானத்தை 5 தடவை சொல். பின் மௌனமாக அமர்ந்து உனது சுவாசத்தை கவனி. மெதுவாக மூச்சு விடு.

இந்த யுக்தியை 5 அல்லது 7 தடவை படுக்கைக்கு போகும்முன் செய். உன்னால் செய்ய முடியும் வரை செய். பின் உறங்கச்
செல். நான் அமைதியாக இருப்பேன் – இது உறுதி. என்று நினைத்தபடி உறங்கச் செல்.
தூக்கம் வரும்போது இந்த எண்ணம் உன்னுள் இருக்கட்டும். பின் விளக்கை அணைத்துவிடு.

முழுமையாக மூச்சை வெளியேற்றியபின் சுவாசிக்காமல் இருக்கும்போது என்ன நிகழ்கிறது மூச்சை
முழுமையாக வெளியேவிட்டபின் சுவாசிக்காமல் மூக்கை மூடிக் கொண்டு விட்டால் என்ன
நடக்கிறது சிறிது நேரத்திற்க்குள் என் முழு உடல்  மட்டும் சுவாசத்திற்காக துடிப்பதில்லை, என்
உடலின் ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு செல்லும் மட்டும் காற்றுக்காக கதறுவதில்லை, எந்த
அளவு நான் சுவாசத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கிறேனோ அந்த அளவு காற்றுக்கான
துடிப்பு என் தன்னுணர்வற்ற நிலைக்குள்ளும் செல்கிறது. எந்த அளவு நான் மூச்சை
நிறுத்தி வைத்திருக்கிறேனோ அந்த அளவு எனது இருப்பின் ஆழ் மையம் வரை காற்றுக்காக
ஏங்குகிறது. அது ஒரு சாதாரண விஷயம் அல்ல இப்போது. மேல்மட்டம் தான் பாதிப்படைகிறது
என்பதல்ல இப்போது இது. இப்போது இது வாழ்வா சாவா என்ற பிரச்னை.
கீழ்மட்டத்திலிருந்து அடி மட்டம்வரை அனைத்துமே காற்றை கேட்கிறது.

உனது முழு இருப்பும் காற்றுக்காக ஏங்கும் இந்த கட்டத்தில், இந்த நேரத்தில் நீ உன்னுள்
நான் தியானஉணர்வு பெறுவேன் என்று சொல்லிக் கொள். உனது உடல் காற்றுக்காக
ஏங்கட்டும், உனது மனம் இந்த நினைப்பை திரும்ப திரும்ப சொல்லட்டும். காற்றுக்கான
ஏக்கம் அதிகமாக அதிகமாக உனது தீர்மானம் உள்ளே செல்லும். உனது முழு உயிரும்
காற்றுக்காக துடிக்க துடிக்க நீ இந்த உறுதிமொழியை திரும்ப திரும்ப சொல். இதன்
தீவிரம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த வழியில் அது உன் தன்னுணர்வற்ற மனத்தினுள்
நுழையும், தன்னுணர்வற்ற மனத்துக்கு சென்று சேரும்.

DHYAN SUTRA

தியான யுக்தி – 2

1)     மௌனமாக அமர்ந்து உன்னைச் சுற்றி பேரானந்தம்
மேகம் போன்று சூழ்ந்திருப்பதாக உணர்ந்து பார். அந்த மேகத்தினுள் தளர்வாக இரு.
உன்னை கரைத்துவிடு. அந்த மேகம் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும், ஆயினும் அது
உன்னுடனே இருக்கும்.

2)     நீ உன்னை கரைக்கும்போது நீ உன்னை மேலும் மேலும் பேரானந்தமாக உணர ஆரம்பிப்பாய். நீ முழுமையாக கரைந்து நீயே இல்லாமல் அந்த மேகம் மட்டுமே இருக்கும் மிக அரிதான கணங்கள் வரும். அவைதான் சமாதி என்றும் சடோரி என்றும் சொல்லப்படும் முதல் தரிசனங்கள்.

3)     சில தினங்களுக்கு பின் நீ அதை உண்மையாகவே உணர
ஆரம்பிப்பாய். ஏனெனில் அது அங்கேயேதான் இருக்கிறது. நீ அதை இதுவரை உணரவில்லை.
அவ்வளவுதான். ஒவ்வொருவரும் பேரானந்த மேகத்தினுள்தான் இருக்கிறோம். நாம் அதை உணர
வேண்டும். அது நமது உயிர், இது நமது உள்ளார்ந்த இயல்பு.

Blessed Are the Ignorant