தியான யுக்தி – 1

அன்பை வெளிக்காட்டுதல்

இதயம் தூங்கிக் கொண்டிருக்கிறது,
நமக்கு வெறுப்பை மட்டுமே வெளிக்காட்ட சொல்லித் தரப்பட்டிருக்கிறது. நாம் அன்பில் துடிக்கும்போது மட்டுமே நாம்
உண்மையிலேயே வாழ்கிறோம், முழுமையாக வாழ்கிறோம்.

அதனால் அதைப்பற்றி விழிப்புணர்வு
கொள், மேலும் மேலும் விழிப்புணர்வு அடைய அடைய அதிக அளவு அன்பை உணர்வாய்.

உனது நண்பனின் கரங்களை பிடித்துக் கொண்டிருக்கும்போது, அதை மிகவும் விழிப்போடு பிடி. உனது கரம் கதகதப்பை வெளிப்படுத்துகிறதா இல்லையா என்று பார்.

கதகதப்பை வெளிப்படுத்தவில்லையானால் அங்கு சக்தி தொடர்பு இருக்காது, சக்தி மாற்றம் இருக்காது. உள்ளே ஆழத்தில் சக்தி பாய்ந்தோடுகிறதா இல்லையா என்று பார். சக்தி வெளிப்பட உதவி செய். அங்கு சக்தியை கொண்டுவா, ஆரம்பத்தில் அது ஒரு கற்பனையான செயலாக இருக்கும், ஆனால் சக்தி கற்பனையை தொடர்ந்து வரும். கரம் கதகதப்போடும் வரவேற்பதாகவும் இருப்பதாக கற்பனை செய் – மிகப் பெரிய மாற்றம் நிகழ்வதை நீயே கண்கூடாக பார்ப்பாய்.

யாரையாவது பார்க்கும்போது, உனது அன்பின் மூலமாக பார், உனது கண்கள் மூலமாக அன்பை கொட்டு, நடக்கும்போது சுற்றிலும்
அன்பை பரப்பிக் கொண்டே நட. ஆரம்பத்தில் அது கற்பனையாக மட்டுமே இருக்கும். ஒரே மாதத்தில் அது
உண்மையாகிவிடும். உன்னை அன்பானவனாக, கதகதப்பானவனாக, உன்னருகில் இருப்பதே மிகவும் நன்றாக
இருப்பதாக, மற்றவர்கள் உணர ஆரம்பிப்பர். ஒரு நல்ல இருத்தல் எழுகிறது.

அன்பை பற்றி மேலும் அதிக உணர்வடை, அன்பை மேலும் அதிகமாக வெளிப்ப்படுத்து.

Blessed Are the Ignorant

தியான யுக்தி – 2

நேசமாக இருத்தல்

நேசத்திலிருந்து சந்தோஷம் பிறக்கிறது. அதுதான் ஒரே சந்தோஷம். நீ எப்போதெல்லாம் நேசிக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்கிறாய். எப்போதெல்லாம் நேசமாக இருக்க முடிவதில்லையோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்க
முடிவதில்லை. சந்தோஷம் நேசத்தின் விளைவு, நேசத்தின் நிழல். அது நேசத்தை பின்தொடரும். நீ மேலும் மேலும் நேசமாக இருக்க இருக்க நீ மேலும் மேலும் சந்தோஷப்படுவாய்.

உன்னுடைய நேசம் திரும்ப வருகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாதே. அது முக்கியமல்ல. அது திரும்ப வருகிறதோ இல்லையோ, மற்றவர்கள் பெற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நீ நேசித்தால் சந்தோஷம் நேசத்தை தானாகவே
பின்தொடரும்.

நீ சந்தோஷமாயிருப்பாய், அதுவே போதும். ஒருவர் எதிர்பார்ப்பதை விட போதும். அதுதான் நேசத்தின் அழகு – அதன் விளைவு –
அதன் அர்த்தம் –  அது அடுத்தவரின் எதிர்விளைவை பொறுத்ததல்ல, அது முழுமையாக உன்னுடையது.

மக்கள் எப்போதும் திரும்ப எதையாவது எதிர்பார்கிறார்கள். அவர்களது நேசம் நிபந்தனைக்குரியது. அவர்கள் என்னை சந்தோஷப்படுத்து, பின் நான் உன்னை நேசிக்கிறேன் என்கின்றனர். அவர்களது நேசத்தில் கட்டுப்பாடு உள்ளது,
அதில் பேரம் உள்ளது. அவர்கள் முழுமையான குருடர்களாக உள்ளனர். நேசிப்பதன் மூலம் சநேதோஷம் தானாகவே மலரும்
என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது ஒரு தொடரும் பின்விளைவு. அதனால் நேசி, நீ யாரை அல்லது எதை நேசிக்கிறாய் என்பது
முக்கியமல்ல – பூனை, நாய், மரம், பாறை எதுவாக இருந்தாலும் சரி, ஒரு பாறையின் அருகில் உட்கார்ந்து அதை நேசி! அதனுடன் பேசு! அதை முத்தமிடு.

அந்த பாறை மீது படுத்துக்கொள். அந்த பாறையுடன் ஒன்றாக உணர்ந்து பார்! திடீரென ஒரு சக்திபிரவாகம், ஒரு சக்தி வெள்ளம் வருவதை உணர்வாய்.  நீ அளவற்ற மகிழ்ச்சியடைவாய். அந்தப் பாறை திரும்ப எதுவும்
கொடுக்காமல் இருக்கலாம், கொடுக்கலாம் – ஆனால் அது முக்கியமல்ல! நீ நேசிப்பதன் மூலம் நீ மகிழ்ச்சியடைகிறாய்.

யார் நேசிக்கிறார்களோ அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒருமுறை உனக்கு இந்த சாவி கிடைத்துவிட்டால், உன்னால் இருபத்திநான்கு மணி நேரமும் சந்தோஷமாக இருக்க முடியும். நீ இருபத்திநான்கு மணி நேரமும்
நேசமாக இருந்தால் பின் நேசிக்க பொருளை தேட மாட்டாய். மேலும் மேலும் நீ விடுதலை பெற்றவனாக
இருப்பாய். ஏனெனில் உன்னால் நேசிக்க முடியும் என்பதை மேலும் மேலும் அதிகமாக அறிந்து கொள்வாய் – அங்கு யாரும் இல்லையென்றால் கூட உன்னைச்சுற்றியுள்ள அந்த வெறுமையை நேசிப்பாய். உன்னுடைய அறையில் தனிமையில்
அமர்ந்திருக்கும்போதுகூட அந்த அறையை உனது அன்பால் நிறைத்துவிடுவாய். நீ சிறையில் இருக்கலாம், நீ அதை கோவிலாக ஒரு
வினாடிக்குள் மாற்றி விடுவாய். நீ அதை நேசத்தால் நிறைக்கும்போது
அது ஒரு சிறையாக இருக்காது!

Dance Your Way To God

தியான யுக்தி 3    

உனது நேசிக்கும் திறனை வளப்படுத்திக்கொள்

மரங்கள், பாறைகள், அன்னியர்கள்,
மக்கள், நண்பர்கள் ஆகிய எல்லோரையும் நேசிக்க ஆரம்பி.

ஒரு பாறை மேல் உட்கார்ந்து அதை நீ காதலிப்பதுபோல உணர்ந்து தொட்டுப்பார்! நீ உடனடியாக பதில்விளைவை
உணர்வாய்! ஒரு மரத்தை ஆழ்ந்த நேசத்துடன் தொட்டுப்பார்! திடீரென அது ஒரு வழிப்பாதையல்ல என்பதை
உணர்வாய்! உணவை சாப்பிடும்போது, உணவை அன்புடன் மெல்லு! குளிக்கும்போது தண்ணீரை தெய்வீகம் போன்று
ஆழ்ந்த அன்புடன் நன்றியுடன் பெற்றுக் கொள்! ஏனெனில் தெய்வீகம் எல்லாவற்றிலும் எல்லா இடத்திலும்
உள்ளது.

ஒருமுறை எல்லாமும் தெய்வீகம் என்று உணர ஆரம்பித்துவிட்டால் பின் நீ நேசத்திற்காக ஏங்க மாட்டாய், ஏனெனில் எல்லா இடங்களிலும் அது நிறைந்திருப்பதை நீ உணர்வாய்.

Nothing To Lose But Your Head