ஓஷோவின்  சிரிப்புகள்-1

உண்மையை விளக்கும்போது ஜெர்மனியன் சேர்கிறான், பிரென்ச்காரன் கழிக்கிறான், இங்கிலீஷ்காரன் அதை மாற்றி விடுகிறான்.

நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஒரு அழகான பெண்ணிடம் ஒருவனை அறிமுகப்படுத்தி வைக்கும்போது அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை பொருத்து அவன் எந்த நாட்டை சேர்ந்தவன் என்று கண்டுபிடித்து விடலாம். ஆங்கிலேயன் கைகளை குலுக்குவான், பிரென்ச்காரன் அவளது கைகளை முத்தமிடுவான், அமெரிக்கன் அவளுக்கு நேரமிருக்கிறதா என்று கேட்பான், ரஷ்யன் என்ன செய்வது என்று மாஸ்கோவை கூப்பிட்டு கேட்பான்.

ஓஷோவின்  சிரிப்புகள்-2

இரண்டு வெள்ளை எலிகள் பரிசோதனை சாலையின் கூண்டு கம்பிகளுக்கிடையே பேசிக் கொண்டன. “எப்படி டாக்டர் ஸ்மித்துடன் உன் பழக்கம் போய்க் கொண்டிருக்கிறது, சொல்?” என்று முதல் எலி கேட்டது.

இரண்டாவது, “மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. சிறிது காலம் பிடித்தாலும் இறுதியில் நான் அவனை தயார் செய்து விட்டேன். இப்போது நான் எப்போது மணியடித்தாலும் உடனே அவன் எனது உணவை கொண்டு வருகிறான்” என்றது.

இது மிகவும் வினேதமான உலகம். மனோஉளவியலாளர் டாக்டர் ஸ்மித் தான் எலிகளை பழக்கப்படுத்த செய்வதாக அவர் நினைத்துக் கொண்டிருக்க, எலிகள் தாங்கள் அவரை பழக்கப்படுத்துவதாக நினைத்துக் கொள்கின்றன. அகம்பாவத்தின் விளையாட்டு…………. மனைவி தான் கணவனை பழக்கப்படுத்துவதாக நினைத்துக் கொள்கிறாள். எல்லா மனைவிகளும் தங்களது வாழ்க்கை முழுவதும் தங்களது கணவனை பழக்கப்படுத்துகிறார்கள். கணவன்கள் மனைவிகளை பழக்கப்படுத்துகிறார்கள்.  இது வாழ்க்கை என்பது பழக்கப்படுத்துவதும் பழக்கப்படுவதுமாகவே இருக்கிறது. ஆனால் இது எதற்காக

ஓஷோவின்  சிரிப்புகள்-3

ஒரு பெண் பிகாஸோவை அணுகி தன்னுடைய படத்தை வரைந்து கொடுக்கச் சொன்னாள். பிகாஸோவும் வரைந்து கொடுத்தார். அவளுக்கு மிகவும் திருப்தி. அவள் இது மிகவும் அழகாக இருக்கிறது, ஆனால் ஒரு விஷயம். நீங்கள் என் கழுத்தை சுற்றி டைமண்ட் நெக்லஸ், விரலில் மிகப்பெரிய வைர மோதிரம், கைகளில் டைமண்ட் பிரஸ்லெட் ஆகியவற்றை வரைய மறந்து விட்டீர்கள். என்றாள்.

பிகாஸோ, ஆனால் நீங்கள் போட்டிருக்கவில்லையே என்று கேட்டார்.

அவள், அது விஷயமல்ல, எனக்கு கேன்சர், இன்னும் ஆறு மாதத்தில் நான் இறந்து விடுவேன். நான் இறந்தவுடன் என் கணவர் மறுமணம் செய்து கொள்வார் என்று எனக்குத் தெரியும். அவர், நீ இல்லாமல் என்னால் ஒரு நொடிகூட வாழ முடியாது என்று கூறினாலும்கூட அவர் நான் இறப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். பெண் இல்லாமல் அவரால் ஒரு கணம்கூட வாழ முடியாது என்று எனக்குத் தெரியும், ஆகவே உடனடியாக அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என்றாள்.

பிகாஸோ, நீ இப்போது கூறியதற்க்கும் டைமண்ட் நகைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை என்றார்.

அவள், உங்களுக்கு பெண் மனது புரியாது. நான் இறந்தபின் எனது கணவர் மணம் செய்து கொள்ளப் போகும் பெண் என்னுடைய சித்திரத்தை பார்ப்பாள். பின் அவள் அவரை எங்கே அந்த வைரங்கள் என்று வதைப்பாள். நான் இறந்தபின்னும் கூட என்னால் அவரை விட்டு இருக்க முடியாது. அவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். என்றாள்.

மக்கள் வாழ்வதை மறந்து விடுகிறார்கள். யாருக்கு நேரமிருக்கிறது. எல்லோரும் மற்றவரை பழக்கப்படுத்துவதிலேயே இருக்கிறார்கள். ஆனால் அதிலும் யாரும் இன்னும் திருப்தி அடைந்த மாதிரியே தெரியவில்லை.

source: The Invitation # 1