ஒரு பாதிரியாரும் ஒரு பஸ் டிரைவரும் ஒரே
சமயத்தில் வந்து சொர்க்கத்தில் வாயிலில் உள்ள செயிண்ட் பீட்டரை சந்தித்தனர்.

“நான் கிராமத்து பாதிரியார். சொர்க்கத்தில் எனக்கு இடம்
கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என்று பாதிரியார் கூறினார்.

“நான் கிராமத்தை சேர்ந்த பஸ் டிரைவர். எனக்கும் சொர்க்கம்
செல்ல ஆசை” என்றான் பஸ் டிரைவர்.

‘சரி’ என்ற பீட்டர், “நீங்கள் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்” என்று பாதிரியாரிடம் சொன்னவர், பஸ் டிரைவரிடம், “நீங்கள் இப்போதே போகலாம்” என்று கூறினார்.

பாதிரியார், “ஒரு நிமிடம்!. நான்தான் ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சில்
மக்களுக்கு பிரார்த்தனை செய்வது எப்படி என்றும் நன்மை செய்வது எவ்வாறு என்றும்
சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவன் வெறும் குடிகார டிரைவர்தானே?” என்று கேட்டார்.

அதற்கு பீட்டர், “அது சரிதான். ஆனால் நீங்கள் சொல்லிக்
கொடுக்கும்போது மக்கள் தூங்கிக் கொண்டுத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவன்
பஸ் ஒட்டும்போது அனைவரும் வெறித்தனமாக பிரார்த்தனை செய்தார்களே!” என்றார்.

-

ஆகவே பிரார்த்தனை ஆபத்தில்தான் நிகழ்கிறது. அப்போதுதான் நீ வாழ்வை முழுமையாக உணர்கிறாய். மற்ற சாதாரண சமயங்களில் நீ ஆழ்ந்த தூக்கத்தில்தான் இருக்கிறாய்.